தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு – அமைச்சர் வலியுறுத்தல்!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் டெல்லி சென்று மத்திய கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு:
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்து 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நீட் தேர்வானது தமிழகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வின் பாடத்திட்டம் மத்திய கல்வி வாரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கொரோனா காரணமாக ரூ.79.47 கோடி வேளாண் கடன் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் ஏழை மாணவர்களின் ‘மருத்துவர்’ என்ற கனவை நீட் தேர்வு முடக்கியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் நாங்கள் ஆட்சி வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
TN Job “FB Group” Join Now
இக்குழு தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. நீட் தேர்வை ரத்து செய்வதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் டெல்லி சென்று மத்திய கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.