தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்!
தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியான நேற்று முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் முதன்முதலில் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அந்த சமயத்தில் அரசு அளித்திருந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் மே 24ம் தேதி முதல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் குறையத் தொடங்கியது.
EPFO கணக்கில் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம் – இம்மாதம் முதல் புதிய நடைமுறை!
இதனால் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. மேலும், ஜூன் 14ம் தேதி வரை இந்த அறிவிப்புகள் நடைமுறையில் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த போதிலும், மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலின் படி, ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை ஊரடங்கை அரசு நீடித்து உத்தரவிட்டது. இருப்பினும் பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஆனால் பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
மற்ற 27 மாவட்டங்களில் சலூன்கள், டீக்கடைகள், பூங்காக்கள் மற்றும் டாஸ்மாக் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியின்றி செயல்படலாம். இதனால் மேலும், நேற்று முதல் தமிழக பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. அழகு நிலையங்களும் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. பூங்காக்களில் நடைப்பயிற்சி செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.