தமிழகத்தில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல் – பொதுமக்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இதனை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனை தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளும், பாதிப்பு குறைவாக காணப்படும் மற்ற மாவட்டங்களுக்கு அதிக தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.
இன்று முதல் கொரோனா முழு ஊரடங்கு தளர்வுகள் – பிரான்ஸ் அரசு அறிவிப்பு!
புதிய தளர்வாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன், சார்பதிவாளர் அலுவலகம் கடும் கட்டுப்பாடுகளுடன் நாள் ஒன்றுக்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி ஊரடங்கில் நடைமுறைப்படுத்தியுள்ள தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போதைய காலம் கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.