கீழடி அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து இனி வரும் காலங்களில் கீழடி ஆகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அகழ்வாய்வு:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்குப் பின்னர் அரசின் துறைகள் அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களின் தேவை மற்றும் மேம்பாடு குறித்த பல நலத்திட்டங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திட்டங்கள் ஏழை, எளிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு விரைவில் சென்று சேருவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் மொழியின் பெருமை மற்றும் சிறப்பை மேம்படுத்துவது குறித்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!
இன்று தமிழக சட்டப்பேரவையின் கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை பதிலுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல திட்டங்களையும் அறிவித்து உள்ளார். அதிலும் குறிப்பாக, உலகத்தரம் வாய்ந்த அகழ்வாய்வாக, கீழடி அகழாய்வு அமைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழரின் தொன்மையின் மதிப்பை சிலர் குறைத்து மதிப்பிட்டு வருவதாகவும், வரலாறு கி.மு இரண்டாம் நூற்றாண்டு முன் இருந்தது எனவும், அதே நெடுமானின் வரலாற்றை பார்க்கும் போது கி.மு 5ம் நூற்றாண்டு என்றும் கீழடி ஆய்வு வந்த பின்பு கி.மு 6ம் நூற்றாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
TN Job “FB Group” Join Now
அந்த நூற்றாண்டின் கால கட்டத்தில் தமிழரின் படிப்பறிவு, எழுத்தறிவு சிறந்து விளங்கியது என்றும், கங்கை சமவெளி நாகரிகத்தைப் போன்று வைகை சமவெளியும் இருந்துள்ளது எனவும், அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழனின் தொன்மை பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தார். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். தமிழரின் நாட்டுப்புற கலை, இளைஞர்களின் இசை நிகழ்ச்சி மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.