CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் தேர்வு? விரைவில் கால அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
முதல் பருவத்தேர்வு :
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக பொதுத்தேர்வு நெருக்கும் நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பாதுக்காப்பாக தேர்வு தயாராக மாநில அரசுகளை அறிவுறுத்தியது. மீண்டும் வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தேர்வுக்கான திருப்புதல் தேர்வும் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த நிலையில் கல்வி ஆண்டு முடிந்தும் தொற்று பரவல் குறையாததால் முதலில் மத்திய கல்வி வாரியம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வினை ரத்து செய்தது.
அரசு பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
அதன் பிறகு மாநில அரசுகளும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தனர். மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் முதல் கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10, 12 ம் மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் பருவத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
அக்.11 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
முதல் பருவத்தேர்வு நவம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கால அட்டவணை விரைவில் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாகும். தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தேர்வானது 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பருவத்தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.