தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அலகுத்தேர்வுகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஆகஸ்ட் 2 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
இந்த தேர்வுகள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவோ, ஆன்லைன் (வாட்ஸ்அப்) மூலமாகவோ நடத்தப்படும் எனவும், நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாத இறுதியில் மொத்தமாக இந்த தேர்வு 50 மதிப்பெண்ணுக்கு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் மூலமாகவே வினாக்களை அனுப்பி மாணவர்கள் தேர்வு எழுதி அதனை வாட்ஸ்ஆப் மூலமாகவே அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.