தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவு பெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்படவுள்ளன. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி அளவில், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைந்த நிலையில் பள்ளிகளை திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்தனர். அதன்பின், மே மாத தொடக்கத்தில் அதாவது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி முடிவடைந்தது.
அதன்பின், தேர்வு முடிந்தவுடன் மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த பாட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் மற்றும் புதுசேரியில் உள்ள சுமார் 45 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. 12ம் வகுப்பு மாணவ,மாணவிகள் சுமார் 8 லட்சத்து 37 ஆயிரம் விடைத்தாள்களை 76 ஆயிரம் ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் 87 முகாம்களில் 87 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
Exams Daily Mobile App Download
10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்