TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த தகவல் வெளியீடு!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TN TET 2022) ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) தகுதித்தேர்வு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
தேர்வு தேதி:
இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – அரசு அறிவித்த முக்கிய மாற்றங்கள்!
மேலும் TN TET தாள் 1 இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் தாள் 2 இல் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு அறிவிப்பின்படி, இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் TET தேர்வு வருகிற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்வு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை, தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.