CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் மற்றும் அரசு வெளியிட்ட மதிப்பீடு முறையிலான மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேர்வு அட்டவணை:
சிபிஎஸ்இ ஜூலை 12 ம் தேதி 12 ம் வகுப்பு தேர்வு முடிவையும், 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 3, 2021 அன்றும் வெளியிட்டது. தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் வாரியம் நடத்தும் நேரடி தேர்வுகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15, 2021 வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மேம்பாடு மற்றும் துணைத் தேர்வுகளை நடத்த உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் என கூறப்பட்டது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை உத்தரவு!
2021 ஆம் ஆண்டின் மதிப்பீடு முறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முடிவுகளில் திருப்தி அடையாத மற்றும் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. CISCE வாரியத் தேர்வுகள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி அதற்கான முடிவுகள் செப்டம்பர் 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!
இந்த தேர்வு அட்டவணை https://www.cbse.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.