தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை – இன்று மாலை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு தேதிகள்:
தமிழகம் முழுவதும் கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்ட பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 10ம் வகுப்புகளுக்கு முழுவதுமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
இதுபோல், 2020-2021ம் கல்வியாண்டிலும் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு தேதிகள் நிர்ணையிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மத்தியில் தகுந்த நோய் தடுப்பு விதிமுறைகளுடன் தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2ம் அலை பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இறுதியில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
தமிழக ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!
ஆனால் 2021-2022ம் கல்வியாண்டில் நிச்சயம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தீர்மானமாக இருந்தது. இதனால் 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக தமிழகத்தில் நடந்தது. இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் மற்றும் அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.