TNPSC தேர்வுக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – தேர்வு முறையில் மாற்றம்! சிறப்பு குழு அமைக்க முடிவு!

0
TNPSC தேர்வுக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு - தேர்வு முறையில் மாற்றம்! சிறப்பு குழு அமைக்க முடிவு!
TNPSC தேர்வுக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு - தேர்வு முறையில் மாற்றம்! சிறப்பு குழு அமைக்க முடிவு!
TNPSC தேர்வுக்காக காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – தேர்வு முறையில் மாற்றம்! சிறப்பு குழு அமைக்க முடிவு!

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பாக, தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது என நிதி அமைச்சர் தியாகராஜன் தகவல் அளித்திருக்கிறார்.

தேர்வு முறை

தமிழக அரசுத்துறையில் ஏற்பட்டிருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குரூப் 2, 2A, குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகளை நடத்துவதற்கு TNPSC தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு TNPSC தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை முதல் தொடர் விடுமுறை!

அந்த வகையில் TNPSC போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் எனவும் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த விடைத்தாள்கள் திருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார் கூறும் போது, ‘TNPSC குரூப் 2 தேர்வுக்கு 10.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதில் இதில் 50 ஆயிரம் பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்களை செலுத்தி உள்ளனர்.

இப்போது போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக போதிய பயிற்சி மையம் இல்லாத காரணத்தால் அரசு சார்பில் கிள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தியாகராஜன், ‘தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் சரியாக நடத்தப்படவில்லை. அதனால், தற்போது வரை அரசுத்துறையில் 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்போது TNPSC தேர்வுக்கான தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு ஆகியவற்றை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க இருக்கிறோம். இந்த குழுவின் பரிந்துரையை பெற்று முடிவு எடுக்கப்படும். இதனை தொடர்ந்து தேர்வு முறையில் அடிப்படை சீர்திருத்தம் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!