TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், மதிப்பெண் குறித்த முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக்கான தகுதிகள் தேர்வு முறை குறித்த முக்கிய விவரங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் மக்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 32 வகையான தேர்வு நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை (மார்ச் 19) மின்தடை ஏற்பட உள்ள முக்கிய பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அடுத்த கட்டமாக குரூப்4, VAO தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறை தேர்வுகளை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையத்தால் தேர்வுகள் (TET) நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் TET தேர்வு நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வுகான விண்ணப்பப்
பதிவுகள் நடைபெற்று வருகிறது. முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும் ( (D.T.Ed) இரண்டாம் தாள் B.ED முடித்தவர்களும் எழுதலாம். முதல் தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும், 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். அதே போல இரண்டாம் தாளும் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.