தேர்வு பணிகளில் பாட வேளைக்கு மட்டுமே ஊதியம் – கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!

0
தேர்வு பணிகளில் பாட வேளைக்கு மட்டுமே ஊதியம் - கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!
தேர்வு பணிகளில் பாட வேளைக்கு மட்டுமே ஊதியம் - கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!
தேர்வு பணிகளில் பாட வேளைக்கு மட்டுமே ஊதியம் – கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!!

கல்லூரி தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு பாட வேளைகளை மட்டுமே கணக்கில் கொண்டு ஊதியம் வழங்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.

பாடவேளைக்கு மட்டும் ஊதியம்

கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பணியில் கல்லூரி விரிவுரையாளர்கள், அலுவலர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்த தேர்வு பணிகளில் ஈடுபடும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்களுக்கு தேர்வு பணிக்கான கட்டண ஊதியம் கல்வி இயக்குனரகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தேர்வு பணிகளில் ஈடுபடும் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்லூரி அலுவலர்கள் ஆகியோருக்கு தேர்வு நடக்கும் பாடவேளையை மட்டுமே கருத்தில் கொண்டு ஊதியம் வழங்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தேவையான வருகை சான்று இல்லாத பணியாளர்களின் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2ம் கட்ட மாதிரித்தேர்வு – முக்கிய முடிவு!!

அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் போது தேர்வு பணிகளில் ஈடுபட்ட துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் தேர்வு நடக்கும் பாடவேளைகளை மட்டுமே கணக்கில் கொண்டு மதிப்பூதியம் கோர வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!