நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் தேர்வு முடிவுகள்! தேர்வு முகமை அறிவிப்பு!

0
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - விரைவில் தேர்வு முடிவுகள்! தேர்வு முகமை அறிவிப்பு!
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - விரைவில் தேர்வு முடிவுகள்! தேர்வு முகமை அறிவிப்பு!
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் தேர்வு முடிவுகள்! தேர்வு முகமை அறிவிப்பு!

இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வர்கள் அதனை அதிகாரப்பூர்வ இணைத்தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வானது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வானது தமிழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தேர்வை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவும் இத்தேர்வை எதிர்த்து வந்தது. இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். இந்த தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுவதாக மாணவர்கள் கூறி வருகின்றனர். ஒரு மாணவர் 3 முறை மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும். பின்னர் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நிர்ணயிக்கும் CUT OFF மதிப்பெண்ணின் கீழ் இடம்பெற வேண்டும். அவ்வாறு தேர்வானால் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.

இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அறிவியல் திறனறித் தேர்வு!

இவ்வாறாக கடந்த செப்-12ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதனை தொடர்ந்து Preliminary Answer key வெளியிடப்பட்டுள்ளது. அந்த Answer key-ன் மீது கேள்வி எழுப்பும் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. அதனால் இந்த வாரத்தில் நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விண்ணப்பத்தாரர்கள் தேர்வு முடிவுகளை என்டிஏயின் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். தேர்வு முடிவு வெளியாகுவதற்கு சில மணி நேரம் முன்பு Final Answer key வெளியிடப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!