நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கு – வசமாக சிக்கிய முன்னாள் எம்எல்ஏ? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கு - வசமாக சிக்கிய முன்னாள் எம்எல்ஏ? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கு - வசமாக சிக்கிய முன்னாள் எம்எல்ஏ? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கு – வசமாக சிக்கிய முன்னாள் எம்எல்ஏ? ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சின்ன திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் விஜே சித்ரா. மேலும் இவர் இரு ஆண்டுக்கு முன்பு தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவரின் தற்கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் வசமாக சிக்கியுள்ளார். இது குறித்து இப்பதிவில் முழுமையாக பார்ப்போம்.

நடிகை விஜே சித்ரா:

மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தவர் விஜே சித்ரா. அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவுடன் அலப்பறை செய்த ஜீவா – பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!

அதனால் அவரின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரின் கணவரான ஹேம்நாத் என்பவரை கைது செய்தனர். ஆனாலும் அவர் கடந்த 2021 மார்ச் 3ல் ஜாமீனில் வெளியில் வந்து விட்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டது காரணமாக அவரின் கணவர் ஹேம்நாத், அவர் நடித்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி ஆகியோருடன் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது போலீஸ் விசாரணையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். மேலும் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முன் பெரம்பலுாரில், ‘கிப்ட் ஷாப்’ திறப்பு விழாவில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து, அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் தொடர் தொந்தரவே காரணம் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அரசிடம் இருந்து அனுமதி வந்தவுடன் அவரை கைது செய்து விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!