தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி தேர்வு – ஆளுநர் வாழ்த்து!!

0
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி தேர்வு - ஆளுநர் வாழ்த்து!!
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி தேர்வு - ஆளுநர் வாழ்த்து!!
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி தேர்வு – ஆளுநர் வாழ்த்து!!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி அவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். மே 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக சபாநாயகர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் மே மாதம் 7 ஆம் பதவியேற்றுக் கொண்டனர்.

முழு ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

வருகிற மே மாதம் 11 ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் தற்போது தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். நாளை சட்டப்பேரவை கூடும் போது, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் கு.பிச்சாண்டி. அவர் 1996 முதல் 2001 வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!