நிலவில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் – சந்திராயன் 2 புதிய கண்டுபிடிப்பு!
சந்திராயன் – 2 விண்கலம் நிலவில் உள்ள வளங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றுள்ள நிலையில், தற்போது புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
சந்திராயன் – 2:
சந்திரயான் – 2 என்பது சந்திரயான் – 1க்கு பின்னர் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, ஜூலை 22 அன்று நிலவை நோக்கி ஜிஎஸ்எல்வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலத்தில் நிலவின் சுற்றுக்கலன், தரையிறங்கி, ஆய்வுக்கலன் ஆகியவை இருந்தது. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பெருமையுடையவை ஆகும்.
BSNL ப்ரீபெய்டு Broadband திட்டம் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
சந்திரயான் – 2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள் நடத்துவதற்காக லேண்ட் ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட்டது. திடீரென்று 2019 செப்டம்பர் 7 ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவை சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1,400 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
இதனை தொடர்ந்து நிலவில் சுற்றி ஆய்வு மேற்கொண்ட வரும் சந்திராயன் – 2 புதிய தகவல்களை அனுப்பியுள்ளது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான் – 2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ மையம் அறிவித்துள்ளது. நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதியில் புறகாற்று மண்டலத்தில் ஆர்கன் – 40 வாயு இருப்பதை சந்திரயான் – 2 கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.