‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் தற்போது 3வது சீசனாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன்களை கடந்து ரசிகர்களின் மனத்தில் தனி ஒரு இடத்தை பிடித்து உள்ளது. இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு வாரா வாரம் அதிகரித்த நிலையில் தான் உள்ளது. சீசன் 3 தொடங்குவதற்கு முன்னதாகே கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பற்றிய ஆர்வம் அதிக அளவில் இருந்தது. அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவருமே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தனர்.
வழக்கத்தை போலவே மிகவும் கலகலப்பாக செல்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இடையில் சில போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்று முன்னதாகவே சொல்லப்பட்டது. இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சுவையில் சமைக்க வேண்டும் என மெயின் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை தேர்வு செய்வதற்க்கு கோமாளிகள் முகம் இருக்கும் மேளம் வைக்கப்பட்டு இருந்தது. சந்தோஷ் மற்றும் ரோஷ்ணி இருவரும் சரியாக சமைக்காததால் அவர்கள் இருவரும் எலிமினேஷன் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதில் பழ வகைகள் கொடுக்கப்பட சந்தோஷ் மாம்பழத்தை வைத்தும், ரோஷ்ணி பலாப்பழத்தை வைத்தும் சமைத்தார்கள். நடுவர்கள் இவர்கள் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து இரண்டுமே சூப்பர் என்று கூறினார்கள். இதனால் யார் வெளியேறுவார்கள் என்று பதட்டம் அதிகரித்தது. இதனால் அர்ஜுன் கண்கலங்க அனைவரும் பதறி விட்டனர். ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடுவர்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.