அனைத்து மொபைலிலும் USB Type C – 2024ம் ஆண்டு டிச. 28ம் தேதி வரை தான் கால அவகாசம்!!
நாட்டில் மின்னணு கழிவுகளை குறைக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி அனைத்து வகையான மொபைலிலும் USB Type C சார்ஜர் பயன்பாட்டை கொண்டு வர கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
USB Type C:
உலகம் முழுவதும் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவதால் மின்னணு கழிவுகளும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய சட்டம் ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, 2024ம் ஆண்டு முதல் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜராக USB Type-C உருவாக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக கல்லூரிகளுக்கு இன்னும் 10 நாட்களில் புதிய பாடத்திட்டம் – உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் தகவல்!
Exams Daily Mobile App Download
இதனால் மின்னணு கழிவுகளும் குறையும். இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய யூனியன் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், அனைத்து வகையான மொபைல் போன்களில் USB Type-C சார்ஜரை 2024ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதிக்குள் கொண்டு வர வேண்டும் என கால அவகாசம் நிர்ணயித்துள்ளது. இதே போல் மடிக்கணினிகளில் ஏப்ரல் 2026 க்குள் USB Type-C சார்ஜருக்கு மாற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.