சங்க இலக்கியங்கள்
- கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்.
- சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
- சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
- சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
- பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
- சங்க இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
பதினெண் மேற்கணக்கு நூல்கள்
- பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள்.
- பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் பன்னிரு பாட்டியல்.
- பதினெண் மேற்கணக்கு நூல்கள் இருவகைப்படும்.அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.
எட்டுத்தொகை நூல்கள்
- எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.
- தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.
- எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
- இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு.ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
- கலிப்பா வகையால் ஆன நூல் கலித்தொகை.
- பரிபாட்டு வகையால் ஆன நூல் பரிபாடல்.
- மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது புறநானூறு.
- எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது பரிபாடல்,கலித்தொகை.
- எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.
எட்டுத்தொகை நூல்கள் வகை:
அகம்,புறம் மற்றும் இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக உள்ளது.
அக நூல்கள்:
- நற்றிணை
- குறுந்தொகை
- அகநானூறு
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
புற நூல்கள்
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
அகமும் புறமும் உடைய நூல்கள்:
- பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா :
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
நூல்கள் | தொகுத்தவர் | தொகுபித்தவர் | பாடல் | அடி | தெய்வம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
சிறுமை | பெருமை | |||||
நற்றிணை | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | 9 | 12 | திருமால் | இந்நூல் 175 புலவர்களால் பாடப்பட்டதுஇந்த நூலுக்கு திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது. |
குறுந்தொகை | பூரிக்கோ | தெரியவில்லை | 4 | 8 | முருகன் | இந்நூல் 205 புலவர்களால் பாடப்பட்டது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை எழுதியுள்ளார்கள். |
ஐங்குறுநூறு | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | 3 | 6 | சிவன் | ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல். |
பதிற்றுபத்து | தெரியவில்லை | தெரியவில்லை | 8 | 57 | பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன.இப்போது 80 செய்யுள்கள் மட்டுமே உள்ளன | |
பரிபாடல் | தெரியவில்லை | தெரியவில்லை | 25 | 400 | பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மீது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன. | |
கலித்தொகை | நல்லந்துவனார் | தெரியவில்லை | 11 | 80 | சிவன் | 150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார்.. உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே. |
அகநானூறு | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | 13 | 31 | சிவன் | நூலிற்கு முதலில் உரை எழுதியவர் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.1-120 = களிற்றியானை நிரை 121-300 = மனிமிடைப்பவளம் 301-400 = நித்திலக்கோவை நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர் சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு. |
புறநானூறு | தெரியவில்லை | தெரியவில்லை | 4 | 40 | சிவன் | புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன. புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லைபுறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன. |
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:
வ.எண் | எட்டுத்தொகை நூல்கள் | வேறு பெயர்கள் |
---|---|---|
1 | நற்றிணை | 1.நற்றிணை நானூறு |
2.தூதின் வழிகாட்டி | ||
2 | குறுந்தொகை | 1.நல்ல குறுந்தொகை |
2.குறுந்தொகை நானூறு | ||
3 | ஐங்குறுநூறு | |
4 | பதிற்றுப்பத்து | இரும்புக் கடலை |
5 | பரிபாடல் | 1.பரிபாட்டு |
2.ஓங்கு பரிபாடல் | ||
3.இசைப்பாட்டு | ||
4.பொருட்கலவை நூல் | ||
5.தமிழின் முதல் இசைபாடல் நூல் | ||
6 | கலித்தொகை | 1.கலி |
2.குறுங்கலி | ||
3.கற்றறிந்தோர் ஏத்தும் கலி | ||
4.கல்விவலார் கண்ட கலி | ||
5.அகப்பாடல் இலக்கியம் | ||
7 | அகநானூறு | 1.அகம் |
2.அகப்பாட்டு | ||
3.நெடுந்தொகை | ||
4.நெடுந்தொகை நானூறு | ||
5.நெடும்பாட்டு | ||
6.பெருந்தொகை நானூறு | ||
8 | புறநானூறு | 1.புறம் |
2.புறப்பாட்டு | ||
3.புறம்பு நானூறு | ||
4.தமிழர் வரலாற்று பெட்டகம் | ||
5.தமிழர் களஞ்சியம் | ||
6.திருக்குறளின் முன்னோடி |