அப்பத்தாவை தீர்த்து கட்டி ஜனனி மீது பழியை போட்ட குணசேகரன் – எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க இருக்கும் காட்சிகள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
எதிர்நீச்சல்:
சமூகத்தில் நிலவும் ஒரு தவறான விஷயத்தை ஒழிக்கும் நோக்கில் எடுக்கும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல ஹிட் அடிக்கும். அவ்வாறான ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல். தனி ஒரு பெண்ணாக முன்னேற துடிக்கும் நாயகிக்கு புகுந்த வீடு நீ ஒரு பெண் தான் என அடக்கி ஒடுக்க நினைக்கிறது. அதை உடைத்து எறிந்து எப்படி அடிமைப்பட்டு கிடக்கும் பிற பெண்களையும் நாயகி முன்னேற்றுகிறாள் என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
Follow our Instagram for more Latest Updates
ஜனனிக்கு தற்போது வரை ஆதரவாக இருந்தது பட்டம்மாள் அப்பத்தா தான். அவர் கொடுத்த தைரியத்தில் தான் ஜனனி மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால் 40% சொத்து அப்பத்தா பெயரில் இருப்பதால் அப்பத்தாவை அழிக்க நினைக்கிறார் குணசேகரன். மேலும் தன் திட்டத்தை செய்து முடித்துவிட்டு அப்பத்தாவை காணோம்.. ஜனனி தான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஏதோ செய்துவிட்டாள் என இரக்கம் இல்லாமல் பழியை போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரே நேரத்தில் மாற்றப்பட்ட நாயகன், நாயகி – இனி இவர்கள் தான் ஜோடி!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே பட்டம்மாள் அப்பத்தா இல்லாமல் பரிதவித்து நிற்கும் ஜனனிக்கு இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… இதை பிற மருமகள்கள் துளியும் நம்பவில்லை என்றாலும்.. அந்த இடத்தில குணசேகரன் கை தான் ஓங்கி நிற்கிறது. இவ்வளவு கஷடங்களை மீறி ஜனனி எப்படி தன் கனவை நிஜமாக்குவார்.. அந்த வீட்டில் சிறைப்பட்டு இருக்கும் மற்ற மருமகள்களையும் எவ்வாறு மீட்க போகிறார் என்பதே இனி வரும் கதைக்களம்.