முழு சொத்தையும் ஜனனி பெயரில் மாற்றி எழுதிய அப்பத்தா.. குணசேகரன் தலையில் விழுந்த பேரிடி!
தமிழ் சின்னத்திரையில் தற்போது டாப் ஹிட் அடித்து கொண்டிருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடரில் தற்போது பல சுவாரசிய திருப்பங்கள் இனி வரும் நாட்களில் வர உள்ளன.
எதிர் நீச்சல்:
திருச்செல்வம் இயக்கத்தில் பெண் சுதந்திரம் பற்றிய முக்கியத்துவத்தை மக்களுக்கு புரியும் படி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் தொடர் எதிர்நீச்சல். குறுகிய காலத்திலேயே டாப் ஹிட் அடித்த இத்தொடர் தற்போது ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த தொடரை சற்று முன்னதாக நேர மாற்றம் செய்யும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது இந்த தொடரில் அடுத்து வரவிருக்கும் சுவாரசியமான ட்விஸ்ட்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது குணசேகரன் எப்பொழுது ஜனனியை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு விவகாரத்தை ஒரு காரணமாக அவர் பயன்படுத்தினாலும் ஜனனி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். மேலும் ஜனனிக்கு இடம் கொடுக்கும் அப்பத்தாவையும் பழி வாங்க குணசேகரன் துணிந்துவிட்டார்.
Exams Daily Mobile App Download
குணசேகரனின் இந்த புத்தி அப்பத்தாவுக்கும் நன்றாகவே தெரியும். இதனால் அப்பத்தா மாஸ்டர் பிளான் ஒன்றை போட உள்ளார். அதாவது ஆதரவின்றி நிர்கதியாக நிற்கும் ஜனனிக்கு தன்னுடைய 40% சொத்தை எழுதி வைக்க இருக்கிறார் அப்பத்தா. சொத்து மட்டும் ஜனனி கையில் வந்துவிட்டால் குணசேகரனால் கூட ஜனனியை அசைக்கமுடியாது. குணசேகரனின் ஆட்டம் திண்டாட்டமாக இருக்க போகிறது. இந்த சுவாரசிய காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் ரசிகர்களுக்கு காட்டப்படும்.