எதிர்நீச்சல்: பெற்றோரை மீறி குணசேகரன் வீட்டில் ஜனனி இருக்க ஒரே காரணம்.. அப்பத்தாவின் மாஸ் திட்டம்!
எதிர்நீச்சல் தொடரில் தற்போது தாய் தந்தையரின் பேச்சையும் மீறி ஜனனி, குணசேகரன் வீட்டில் இருக்கிறார். இதற்கு என்ன காரணம், அடுத்து இந்த சீரியல் எப்படி நகர போகிறது என இப்பதிவில் காண்போம்.
சன் டிவி எதிர்நீச்சல்:
சின்னத்திரையில் தற்போது டாப் 3 இடங்களுக்குள் இருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். வாழ்க்கையே நிர்கதியான பின்பும் தளராமல் போராடும் ஒரு பெண்ணின் கதை தான் இது. கணவருடனும் கணவரின் குடும்பத்துடனும் எந்த உறவும் வேண்டாம் என ஜனனி முடிவு செய்து விட்டார்.
Follow our Instagram for more Latest Updates
அப்படி இருந்தும் ஏன் மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் ஜனனி நுழைந்தார் என யாருக்கும் தெரியவில்லை. இதுபற்றி ஜனனியின் பெற்றோர் கேக்கும்பொழுது கூட அவர் காரணத்தை கூறவில்லை. ஆனால் அது என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அடிமைப்பட்டு கிடக்கும் பெண்களை காப்பாற்றுவதே தற்போது ஜனனியின் நோக்கம்.
அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஷாக்.. சன் டிவியில் End Card-க்கு தயாரான மற்றொரு ஹிட் சீரியல்!
அதை அந்த வீட்டில் இருந்து தொடங்க நினைத்து தற்போது அங்கு சிறைப்பட்டு இருக்கும் 3 மருமகள்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஜனனி நினைக்கிறார். ஜனனியின் இந்த தைரியத்தை பார்த்து அந்த மருமகள்களும் நாளடைவில் மாறி குணசேகரனை எதிர்க்க உள்ளனர். இதெல்லாம் இனி வரும் எதிர்நீச்சல் எபிசோடுகளில் காட்டப்படும்.