எத்திராஜ் காலேஜ் மாணவி டூ விஜய் டிவி ஆங்கர் ப்ரியங்காவின் வெற்றி கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளராக மக்களிடம் பிரபலமானவர் ப்ரியங்கா. அவர் எத்திராஜ் காலேஜ் மாணவியாக இருந்து பின் டாப் ஆங்கர் என்ற இடத்திற்கு எப்படி வந்தார் என்பது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தொகுப்பாளினி ப்ரியங்கா:
சின்னத்திரையில் டாப் சேனல்களில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் புதுமுகங்களாக பலர் அறிமுகமாகி சினிமாவில் ஸ்டாராக கலக்கி வருகின்றனர். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கொடுப்பதில் விஜய் டிவியை மிஞ்ச முடியாது. அந்த வகையில் விஜய் டிவி நட்சத்திரங்களும், தொகுப்பாளர்களும் திறமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றனர். விஜய் டிவி தொகுப்பாளர்களில் பிரபலமானவர் தான் பிரியங்கா, தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.
Exams Daily Mobile App Download
பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் அவர் மாகாபா ஆனந்த் உடன் இணைந்து செய்யும் எல்லா நிகழ்ச்சியும் காமெடி கன்டென்ட்டிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் பிரியங்காவை ஜாலியாகவே பார்த்த மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அவர் மிகவும் எமோஷனலாக பார்த்தார்கள். ப்ரியங்காவின் சொந்த ஊர் மகாராஷ்டிரா ஆனால் அதன் பின் அவரது பெற்றோர்கள் கர்நாடகாவில் குடியேறி இருக்கின்றனர்.
விஜே சித்ராவின் மரணத்திற்கு காரணம் இவர்கள் தான்? கணவர் ஹேம்நாத் புகார்! நீடிக்கும் மர்மம்!
இவர் அங்கராக தன்னுடைய பயணத்தை எத்திராஜ் காலேஜில் படிக்கும் போதே தொடங்கி இருக்கிறார். முதலில் சன் டிவியில் குட் மார்னிங் ஷோவில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பின் சுட்டி டிவியில் கூட குழந்தைகளுடன் சேர்ந்து ஷோ செய்து இருக்கிறார். அதன் பின் அவர் மாகாபா உதவியுடன் விஜய் டிவிக்கு வந்துள்ளார். இவரின் முதல் நிகழ்ச்சியே மாகாபா ஆனந்துடன் சினிமா காரம் காப்பி மற்றும் ஒல்லி பெல்லி ஆகியவை அதன் பின் அவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அது ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது .