ஜனனியை அடிக்க கை ஓங்கும் குணசேகரன்.. எதிர்த்து நிற்கும் சக்தி – எதிர்நீச்சல் சீரியல்!
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா எப்போது கண் விழிப்பார், ஆதிரை – அருண் திருமணம் நடக்குமா என்று பல்வேறு கேள்விக்குறிகள் உள்ள நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளுக்கான தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்:
அருணை ஜனனி சொன்னது படி பத்திரமாக கெளதம் கொடைக்கானலில் சென்று மறைத்து வைத்துள்ளார். ஆனால் விஷயம் தெரியாததால் அருணை காணாமல் இங்கே அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றனர். அரசு ஒரு புறம் அருணை தீவிரமாக தேட, குணசேகரன் தான் அருணை ஏதாவது செய்திருப்பார் என்று சந்தேகமும் எழுகிறது.
தமிழக அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!
இன்னொரு புறம் குணசேகரன் ஜனனியை சந்தேகத்தோடு பார்க்கிறார். ஒருநாள் ஜனனியை நீ தான் அந்த அருண் பயலை ஒளித்து வைத்திருக்கிறாய் என்று அடிக்க கை ஓங்குகிறார். இதனால், சக்தி கோவப்பட்டு அண்ணனை அடிக்க செல்கிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயத்துடன் உறைந்து போகின்றனர்.