பாதியிலேயே விட்டு சென்ற கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நாயகி நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா!
Prime time சீரியல்களில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரில் நந்தினி ரோலில் நடித்து வரும் ஹரிப்ரியாவின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ள சோக சம்பவம் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்:
பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எதிர்த்து போராடும் பெண்ணின் கதை தான் எதிர்நீச்சல். இதில் கதாநாயகியாக மதுமிதா நடித்தாலும், துணை நடிகையாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹரிப்ரியா. இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.
Follow our Twitter Page for More Latest News Updates
பின்னர் மேற்கு மாம்பழத்தில் ஒரு காதல் என்ற தொடரில் நடிக்கும் பொழுது சக நடிகர் விக்னேஷை திருமணம் செய்து செட்டில் ஆனார். ஆனால் குழந்தை பிறந்த பின் சில காலத்திலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மேலும் தற்போது ஹரிப்ரியா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
கணவரை பிரிந்த பின்பும் தன் கேரியரில் கவனம் செலுத்தி நாடக தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்துள்ளது. அவரின் நந்தினி ரோலுக்கு அப்படியே ஹரிப்ரியா பொருந்தி போய் உள்ளார். இருப்பினும் இவருக்கு சொந்த வாழ்வில் ஏற்பட்ட இந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.