தடாலடியாக போலீஸுடன் கோபி திருமணத்தில் நுழைந்த ஈஸ்வரி, ராமமூர்த்தி – திகைத்து போன ராதிகா!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது கோபி ராதிகாவின் திருமண எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சீரியலில் அடுத்து நடக்க இருக்கும் சுவாரசிய அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
பலரது எதிர்ப்பையும் மீறி கோபி ராதிகாவை திருமணம் செய்ய தயாராகி வருகிறார். கோபியின் தந்தை ராமமூர்த்தி இந்த திருமணத்தால் யாருக்கும் நன்மை நடக்க போவது இல்லை.. இனியாவை சற்று யோசித்து பார்.. என சொல்லியும் கோபி திருந்தவில்லை. மறுபுறம் இந்த திருமணத்தில் பாக்கியா தான் சமைக்க உள்ளார்.
தன் முன்னாள் கணவரின் திருமணம் தான் இது என்று பாக்கியா அறியும் போது எப்படி அதை எதிர்கொள்ள போகிறார் என நினைத்தால் நமக்கே சற்று கவலையாக தான் உள்ளது. இந்நிலையில் அடுத்து இந்த சீரியலில் நடக்க இருக்கும் எபிசோடு பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஏற்கனவே கோபியிடம் ஈஸ்வரி எப்படி இந்த திருமணம் நடக்கிறது என்று பார்க்கிறேன் என சவால் விட்டு இருப்பார்.
சீரியல் முடிஞ்சுருச்சு.. அப்புறம் என்ன? பிக் பாஸ் தான் – முதல் ஆளாக நுழைந்த விஜய் டிவி நடிகை!
Exams Daily Mobile App Download
அதற்கு ஏற்றபடியே கோபி திருமணத்தில் ஈஸ்வரி, ராமமூர்த்தி போலீசுடன் வர உள்ளனர். என்னதான் விவாகரத்து ஆனாலும் பாக்கியா, ஈஸ்வரியின் வாக்குமூலத்தை தான் போலீஸ் கேக்கும். அப்படி இருக்கையில் இந்த திருமணம் நடப்பது சிக்கலே. ரசிகர்களும் அதை தான் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த எபிசோடுகள் இன்னும் சில நாட்களில் டெலிகாஸ்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்