கோபியை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

0
கோபியை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
கோபியை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
கோபியை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

இத்தனை நாட்களாக கோபியை பற்றிய உண்மைகள் ராமமூர்த்தி தாத்தா மற்றும் எழிலுக்கு மட்டுமே தெரியும். ஆனால், தற்போது ஈஸ்வரிக்கு ராமமூர்த்தி தாத்தா அனைத்து உண்மைகளையும் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாட்டிக் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை நாட்களாக தனது தந்திர புத்தியால் யாருக்குமே சந்தேகம் வராமல் கோபி தப்பித்துக்கொண்டே இருந்தார். பின்னர் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் உளறி கொட்டினார். பின்னர், பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவுக்கு தெரிய வந்ததுமே கோபியை விட்டு முழுவதுமாக விலக வேண்டும் என நினைக்கிறார். ஆனால், ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என ராதிகாவை கோபி விடாமல் துரத்தி கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இதனால், கோபி எப்படியும் நம்மை விடமாட்டார் என நினைத்து மயூவை மட்டும் அழைத்து கொண்டு துபாய் செல்ல ராதிகா முடிவெடுத்திருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறு புறம் ராஜேசும் அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கோபியின் வீட்டிற்கும் சென்று ராஜேஷ் சண்டை போட்டிருக்கிறார். மேலும், எதற்காக இவர் அடிக்கடி இங்கு வர வேண்டும் என ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனால், இது பற்றி ராமமூர்த்தி தாத்தா மற்றும் எழிலிடம் கேட்க இருவருமே அமைதியாக இருக்கின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் ரத்து? திடீர் அறிவிப்பு!

பின்னர், இதற்கு மேலும் இந்த உண்மையை மூடி மறைத்து என்ன நடக்க போகிறது என நினைத்து ராமமூர்த்தி தாத்தா ஈஸ்வரியிடம் உனது பையனுக்கும் வேறொரு பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது என கூறுகிறார். மேலும், இதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தான் அமைதியாக இருந்துவிட்டோம் என கூறுகிறார். ஆனால், இதனை கேட்டதும் ஈஸ்வரி மிகவும் நொறுங்கி போகிறார். இனியாவும் தாத்தா செல்வதை கேட்டு அப்பா அந்த மாதிரியெல்லாம் செய்யவே மாட்டார் என கூறி கதறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், தற்போது வரைக்கும் பாக்கியாவிற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியவரவில்லை. எனவே, பாக்கியாவிற்கு உண்மைகள் தெரியவந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!