இனி அனைத்து வகையான உணவகத்தின் சேவைக்கும் 5% ஜிஎஸ்டி – அதிரடி உத்தரவு!!
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுதல், பார்சல், வீட்டிற்கு டெலிவரி செய்வது ஆகிய அனைத்து சேவைகளுக்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தின் குஜராத் அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.
ஜிஎஸ்டி
தற்போது உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல், டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா என ரித்தி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தின் குஜராத் அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தற்போது, இந்த வழக்கு விசாரணையின் போது தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளதாவது, மத்திய மறைமுக வரிகள் வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க குழு – அதிரடி உத்தரவு!!
Follow our Twitter Page for More Latest News Updates
ஒரு உணவகத்தின் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகள் அனைத்தும் ‘உணவக சேவைகள்’ பிரிவின் கீழ் தான் வரும் என்றும் இதன் அடிப்படையில் உணவகத்தில் சமைக்கப்பட்டு வழங்கப்படும் உணவுகளை உணவகத்திலேயே அமர்ந்து சாப்பிடுதல், பார்சல், டெலிவரி பெற்று சாப்பிடுதல் ஆகியவற்றிற்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட உணவை உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கும், பார்சல் எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கும், டெலிவரி பெற்று சாப்பிடுபவர்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.