தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

0
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் - நீதிமன்றம் புதிய உத்தரவு!
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் - நீதிமன்றம் புதிய உத்தரவு!
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் கருத்து

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சசிகலா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சட்டமன்ற, நாடளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் போது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது, அவர்கள் நள்ளிரவு வரை பணியில் இருப்பதால் போதிய பாதுகாப்பு இல்லை,மேலும் பெண்கள் பணிக்கு செல்லும் போது போக்குவரத்து, உணவு, கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கல்விக்கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் அடாவடி – வலுக்கும் கோரிக்கை!!

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு அழைக்க கூடாது என கொள்கை உள்ளது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுப்பது அதிகாரிகளின் கடமை என வலியுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!