எழில் அமிர்தாவின் திருமணம்.. மகனின் வாழ்க்கைக்காக களத்தில் இறங்கிய பாக்கியா – அதிரடி திருப்பம்!
பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து பாக்கியா வீட்டிற்கு அருகிலேயே குடி வந்துள்ளார். இந்நிலையில் தொடர் அடுத்து எவ்வாறு நகர போகிறது என்ற அப்டேட் கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில் கோபியை முழுவதுமாக தலைமுழுகி விட்டார் பாக்கியா. கோபி என்ன செய்தாலும் இனி அது பாக்கியாவை துளி கூட பாதிக்காது என்பது தான் உண்மை. மேலும் தன் சுய தொழில் மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தன் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது தன் குழந்தைகளின் வாழ்க்கையாவது இனி நன்றாக இருக்க வேண்டும் என பாக்கியா முடிவு செய்கிறார். இதனால் எழிலுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அமிர்தாவை பற்றி ஏற்கனவே எழில் பாக்கியாவிடம் கூறி இருந்ததால் அமிர்தா வீட்டில் சென்று பேசலாம் என பாக்கியா நினைக்கிறார்.
கண்டிப்பாக பாக்கியாவின் இந்த முடிவு ஈஸ்வரிக்கு பிடிக்காது. இதனால் என்ன பிரளயம் வர போகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம். ஏற்கனவே பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் எபிசோடில் மூர்த்தி எழிலின் திருமணம் பற்றி விசாரிப்பார். அப்படி இருக்கையில் கண்டிப்பாக எழில் திருமண எபிசோடுகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்பது உறுதி.