தேர்வு இல்லாமல் தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Chair Person & Member பணியிடங்களை நிரப்ப ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 21.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியனவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். Chair Person & Member பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பத்தர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். எனவே தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.