ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு – விரைவில் இடைத்தேர்தல்!
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அவர்கள் உடல் நல குறைவால் கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். அதனால் சட்ட விதியின் படி அடுத்த 6 மாதத்திற்குள் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
தேர்தல்:
ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா அவர்கள் சில நாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.
பெண் மற்றும் பெண் போலீசாருக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை – தமிழக முதல்வர் அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இவரது உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் குடும்ப உறவினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.
இவரது மறைவையடுத்து தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது.
இது குறித்து அரசு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரபூர்வமாக அறிக்கை அனுப்பியுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய விதியின் படி காலியிடம் உள்ள தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி 6 மாதத்திற்குள் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.