இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவல் – மத்திய அரசின் புதிய குழு!
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவத் தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்தே முழுவதுமாக மீண்டு வர முடியாத நிலையில் குரங்கு அம்மை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வழிகாட்டுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
குரங்கு அம்மை:
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. முதன் முதலில் கேரள மாநிலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர். பிறகு மீண்டும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதும் 75 நாடுகளில் வைரஸ் தொற்று பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் 16,000 க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பு பணியாக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இருப்பினும் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை மேலும் அதிகரித்து தான் வருகிறது.
கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு? RBI முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்காக அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க மத்திய அரசு குழு ஒன்றை உருவாக்கி உள்ளது. இக்குழுவில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்குழுவானது குரங்கம்மை நோய்த் தொற்று குறித்து ஆராய்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.