அடிப்படை ஊதியம் ரூ.15,000க்கு மேல் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம் – EPFO திட்டம்!
இந்தியாவில் அமைப்புசார் துறைகளின் கீழ் 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
புதிய ஓய்வூதியம்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நிறைவு – விரைவில் மதிப்பெண் வெளியீடு!
அதன்படி அண்மையில் EPFO வருங்கால வைப்பு நிதியின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரிச்சலுகை வசதியை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது ல் அமைப்புசார் துறைகளின் கீழ் 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அமைப்புசார் துறைகளில் ஒருவர் பணிக்கு சேரும் போது அவரது அடிப்படை ஊதியம் 15000 த்திற்கு கீழ் பெறும் நபர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார் ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதம் தொகை ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
மார்ச் மாத சம்பளத்துடன் DA 34% உயர்வு & 2 மாத நிலுவைத்தொகை – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
மேலும் ரூ.15,000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் சிலரும் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கும் 8.33 சதவீதம் தொகை ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ரூ.15000 க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பிஎப் அலுவலகம் பரிசீலித்து வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அடுத்த மாதம் மாதம் 11,12 தேதிகளில் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.