EPFO பயனர்கள் கவனத்திற்கு.. அதிகரிக்கும் ஓய்வூதியம் – வெளியான சூப்பர் தகவல்!!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கணக்குதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஓய்வூதிய பலன்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வருங்கால வைப்பு நிதி:
இந்தியாவில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இந்த பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை எதிர்காலத்திற்கான ஒரு சேமிப்பாக கருதப்படுகிறது. தற்போது இந்த பிஎஃப் கணக்கில் இருந்து தேவைப்படும் போது நிதியை எடுத்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உங்கள் தொகைக்கு 8.1 சதவீத வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தில் சேர்ந்து 6 மாத காலம் நிறைவடைந்த பிறகு உங்களது தொகையை நீங்கள் எடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நீங்கள் பிஎப் கணக்கில் இருந்து தொகையை எடுக்காமல் இருந்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வு காலத்தில் அதிக பணம் கிடைக்கும். இந்த நிலையில் மத்திய அறங்காவலர் குழு வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்திற்கு முக்கிய பரிந்துரையை வழங்கியுள்ளது.
டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மும்பை – மோசமாகும் காற்றின் தரம்! தீவிர நடவடிக்கை!
Follow our Instagram for more Latest Updates
அதாவது 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் EPS கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல இத்திட்டத்தில் சேர்ந்து 34 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள உறுப்பினர்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பண பலன்கள் கிடைக்கும்.