ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு.. நிர்பாத் சேவா திட்டம் அறிமுகம்! இனி பென்ஷன் பெறுவது ஈஸி!!
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. இதையடுத்து தற்போது, தாமதமின்றி ஓய்வூதியம் பெற சூப்பரான திட்டம் ஒன்றை EPFO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம்:
அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இதற்கு EPFO நிறுவனத்தின் கீழ் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்நிறுவனம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
பள்ளி மாணவர்களுக்கு ஜன. 15 வரை தொடர் விடுமுறை – வட மாநிலங்களில் உறைய வைக்கும் பனி எதிரொலி!
அத்துடன் ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களுக்கும் தனித்துவமான 12 இலக்க எண்ணும் வழங்கப்படும். ஒவ்வொரு ஊழியருக்கும் கடிதம் மூலமாக PPO எண் அனுப்பப்படுகிறது. இந்த PPO எண் ஆனது ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.
முன்னதாக EPFO உறுப்பினர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இதனை தடுக்கும் விதமாக EPFO அமைப்பானது ‘நிர்பாத் சேவா’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக பணியிலிருந்து ஓய்வுபெற்ற EPFOன் உறுப்பினர்கள் குறைந்த நாட்களில் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.