EPFO ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!!
கொரோனா நோய்த்தொற்றின் பேரிடர் காலத்தில் பிஎஃப் ஊழியர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு, ஊழியர்கள் தங்களின் இருப்பில் இருந்து 75 சதவிகிதத்தை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிஎஃப் ஊழியர்கள்:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது பிஎஃப் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன்படி ஊழியர்கள் பயனடையும் வகையில் தங்களது பிஎஃப் பணத்தில் இருந்து 75 சதவிகிதம் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
மாலை 6 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – முழு ஊரடங்கை நீட்டித்த மாநில அரசு!
இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டு வந்தது. அதாவது மத்திய அரசு கடந்த ஆண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பை கருத்தில் கொண்டு ஊழியர்களின் பிஎஃப் பணத்தில் இருந்து 3 மாதம் ஊதிய தொகையை முன்பணமாக வழங்கியது. தற்போது இதனை பெற்றவர்கள் இந்த ஆண்டு தொகை பெற முடியுமா என்று கேள்விகள் எழும்பி வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது மூன்று மாத ஊதியத்தை கடந்த ஆண்டு முன்பணம் பெற்றவர்கள் இந்த ஆண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் விண்ணப்பித்த 3 நாட்களில் தொகை கிடைத்து விடும் என்றும் இதனை திருப்ப செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது வரை ஈ.பிஎஃப்.ஓ விடம் முன்பணம் கேட்டு 76.31 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்றும் ரூ.18,698 கோடி வரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ada pooga pa Naa pf withdrawal req. Kooduthu 1mnth aaka pookuthu …enku enum amt account ku varala
Same bro
What reason bro
PF pension amount eduka allow panunga plssssss
Na apply panni 1month aguthu but innum varala eppa varum nu achi solluga plss