விரைவில் EPFO வட்டி விகிதத்தில் உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு !
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மேலும் இது போன்ற சூப்பரான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 28% அகவிலைப்படியை பெற்றனர்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து 31% அகவிலைப்படி பெற்று வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க உள்ள சலுகைகள் பற்றி பார்ப்போம். இதையடுத்து உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கு ரூ.10000 இருந்து ரூ.30000 வரை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு!
இதையடுத்து இபிஎஃப் குழுவில் வட்டி விகிதம் வருடத்திற்கு 8.10% ஆக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அதன்படி வருகிற ஜூலை மாதத்தில் 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 39% ஆக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.