EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை தேர்வு செய்வது அவசியம். ஆன்லைன் மூலம் நீங்கள் பிஎஃப் கணக்கு நாமினியை தேர்வு செய்யலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
பிஎப் கணக்கு:
பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வு காலத்தில் பேருதவியாக இருக்கிறது. இந்த ஈபிஎப்ஓ அமைப்பு அவ்வபோது புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஈபிஎஃப்ஓ வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே எளிதாக மொபைல் மூலம் உங்களின் பிஎப் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொள்ளலாம்.
தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!
இந்த சம்பளம் பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதனால் பிஎப் கணக்கு தாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிஎப் கணக்கில் இருந்து கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் உட்பட எல்லா பலன்களையும் நாமினி தொடந்து பெற முடியும். ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு செய்து நியமனம் செய்யலாம். நாமினியாக தேர்வு செய்யப்படுபவர்கள் புகைப்படம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், முகவரி ஆகியவை அவசியமாகும்.
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – ஹால் டிக்கெட் வெளியீடு..!
ஆன்லைன் மூலம் நாமினி நியமனம் செய்யும் முறைகள் :
- EPFO இணையப்பக்கத்தில் epfindia.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- அதில் Service என்ற விருப்பத்தை தேர்வு செய்து அடுத்ததாக For Employees என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- பிறகு உங்களுடைய UAN எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு உள்நுழையவும். அதில் இ-நாமினேஷன் என்ற பிரிவில் குடும்ப விவரங்களை சேர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தகவலை நிரப்ப வேண்டும்.
- மொத்த பங்கின் தொகையை அறிவிக்க ‘நாமினேஷன் விபரங்கள்’ (Nomination Details) என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு ‘Save EPF Nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
- கடைசியாக உங்கள் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP SEND செய்து அந்த எண்ணை பதிவிட்டு நாமினியை உறுதி செய்ய வேண்டும்.