இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – நவ.8 முதல் அனுமதி!
கொரோனா பேரலை காரணமாக வெளிநாட்டவர் வருகைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த அமெரிக்கா அரசாங்கம் நவம்பர் 8ம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதி வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி
கடந்த ஆண்டு துவக்கத்தில் உருவான கொரோனா பேரலையால் பல்வேறு உலக நாடுகளும் முடக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா முதலாம் அலை தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தனது எல்லைப் பகுதியை முற்றிலுமாக அடைத்தது. இதற்கிடையில் நோய்ப் பரவல் குறைந்ததும் திறக்கப்பட்ட சேவைகள் தொடர்ச்சியான அலைகள் காரணமாக மீண்டும் மூடப்பட்டது.
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை!
குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்க அரசு முற்றிலுமாக தடை விதித்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு அமெரிக்கா தனது எல்லைகளை திறப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது, அமெரிக்காவில் நீடித்திருந்த பயணத் தடையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பா, இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து நேரடியாக அமெரிக்கா வரும் வெளிநாட்டினரை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இப்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவுகளை பெற்றிருக்க வேண்டும். அதே போல தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு செப்டம்பர் 20ம் தேதி வெளியானது. ஆனால் இவை செயல்படுத்தப்படும் காலம் குறித்து அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அப்போது அறிவிக்கவில்லை. இப்போது நவம்பர் 8ம் தேதி முதல் வெளிநாட்டவருக்கான விமான பயண விதிகளில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் இந்த வார துவக்கத்தில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செலுத்தி இருக்கும் பயணிகளுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளிக்கும் என்றும் சாலை வழியாக அமெரிக்கா வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.