தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு – பல்கலை அறிவிப்பு!!
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேர தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்கள் தற்போது நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுகள் ஜூன் மாதத்திலேயே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
நுழைவுத்தேர்வு:
மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளை சார்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவ படிப்பிற்கு நீட் மற்றும் மத்திய அரசின் ஐ.ஐ.டி., – என்.ஐ.டி.கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் சேர ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டு நுழைவுத் தேர்விற்கும் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது.
டிக் டாக் (Tik Tok) செயலி மீதான தடை நீக்கம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!
அதேபோல் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தற்போது அனைத்து பிளஸ் 2 தேர்ச்சி மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர, தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகத்தில் இந்த மாதம் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சத்யபாமா நிகர்நிலை பல்கலை, ஹிந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை, எஸ்.ஆர்.எம்.பல்கலை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலை போன்ற பல பல்கலைகள் நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.