TNPSC ராணுவ கல்லூரி நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அளவானது வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு:
தற்போதைய சூழலில் அரசு வேலை பெறுவது என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. இதற்காக பலர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தகுதிபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆட தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை – முக்கிய விவரங்கள் இங்கே!
கொரோனா முதல் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து கொரோனா 2ம் அலை பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது மக்கள் அதிகம் கூடுவதன் மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் திட்டம் – பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ!
எனவே கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க கால அளவு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதனை வரும் 15ம் தேதி வரை நீட்டிக்க அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை அறிய http://tnpsc.gov.in என்னும் இணையதளத்தை பார்வையிட வலியுறுத்தப்பட்டுள்ளது.