மருத்துவம் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – மாநில அரசு உறுதி

0
மருத்துவம் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
மருத்துவம் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

மருத்துவம் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – மாநில அரசு உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வந்ததனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மேலும் தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திட்டமிட்டபடி அறிவித்த தேதியில் மருத்துவம் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் என மாநில அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் பொறியியல் பாடங்களுக்கான KEAM நுழைவுத்தேர்வுகள் கேரளா பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 அன்று நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றினால் ஊரடங்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வுகளானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கேரளா அரசானது ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இந்த தேர்வுகளை நடத்த உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின் படி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு உறுதியாக இருப்பதனால் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். கொரோனாவின் தாக்கத்தினை தாண்டி தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!