தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயக்கப்படவில்லை. அதனால் மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. அதனால் நடப்பு கல்வியாண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான அறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கொரோனா விடுமுறை காரணமாக 2ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக 3ம் வகுப்புக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அத்துடன் கடந்த கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்றது.
Reliance Jio பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பல புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
மேலும் கிராமங்களில் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வழியில் பாடங்களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இவர்களின் கற்றல் இழப்பு சரி செய்யும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் ” எண்ணும் எழுத்தும் திட்டம் ” என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டம் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் மூலம் மாணவர்கள் பயனடைந்துள்ளனவா என்பது குறித்து அறிய பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும் திட்டம்” என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது இத்திட்டம் மூலமாக மாணவர்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்பது குறித்து அறிய வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வளரறி மதிப்பீடு செயலி மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வருகிற 5ம் தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.