தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூரில் ஆங்கில பயிற்சி – வெளியான சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்துள்ளது. அதனால் அரசு பள்ளிகளிலும் ஆங்கில பாடத்திட்டத்தை சிறந்த முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு பெங்களூரில் ஆங்கில பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஆங்கில வழிப்பாடம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழியில் நடத்தும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே பாடம் நடத்தப்படுவதால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிப்பாடத்தை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொடக்கக் கல்வி இயக்குனரகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறலில் அரசு பேருந்துகள் – நடவடிக்கை எடுக்கப்படும்.. கமிஷனர் எச்சரிக்கை!
இந்த அறிவிப்பில், தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் சார்பாக அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.