IND vs ENG 4வது டெஸ்ட் – 100 ரன்களை எட்டியது இந்திய அணி!! பேட்ஸ்மேன்கள் நிதானம்

0
IND vs ENG 4வது டெஸ்ட் - 100 ரன்களை எட்டியது இந்திய அணி!! பேட்ஸ்மேன்கள் நிதானம்
IND vs ENG 4வது டெஸ்ட் - 100 ரன்களை எட்டியது இந்திய அணி!! பேட்ஸ்மேன்கள் நிதானம்
IND vs ENG 4வது டெஸ்ட் – 100 ரன்களை எட்டியது இந்திய அணி!! பேட்ஸ்மேன்கள் நிதானம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ள 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்து உள்ளார். இதனையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர்.

டெஸ்ட் போட்டி:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளன. இதற்காக இந்திய அணியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. நாட்டிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித் தள்ளியது. அதில் இந்திய ஆணி பவுலிங்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து. அந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது.

IPL 2021 அப்டேட்ஸ் – துபாய் பறந்த ஸ்டீவ் ஸ்மித்! டெல்லி கேபிட்டல்ஸ் அசுர பலம்!

பின்னர் லீட்ஸ்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்கிஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாகவே இருந்தது. எனவே விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓவலில் 4வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும்.

தற்போது இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

டெஸ்ட் போட்டி லைவ் அப்டேட்ஸ்
  • இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து வந்த இந்த கூட்டணியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். அவரது வேகத்தில் ரோஹித் சர்மா 11 ரன்களில் (27 பந்துகள், 1 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். இந்திய அணி தற்போது 10.2 ஒவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் குவித்துள்ளது.
  • நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கே எல் ராகுல் 17 ரன்களில் (44 பந்துகள், 3 பவுண்டரி) ஒல்லி ராபின்சன் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இந்திய ஆணி 14.2 ஓவர்களின் முடிவில் 32 ரன்களுடன் தடுமாறி வருகிறது. களத்தில் தற்போது புஜாரா (4) கோஹ்லி (0) உள்ளனர்.
  • இந்தியாவின் நவீன தடுப்புச் சுவர் புஜாராவும் 4 ரன்களில் (31 பந்துகள்) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிதம் கேட்ச் குடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜா மற்றும் கோஹ்லி விக்கெட் விழுவதை தடுக்க கவனமாக விளையாடி வருகின்றனர். தற்போது உணவு இடைவெளியில் 25 ஓவர்களுக்கு 54/3 என்ற நிலையில் இந்திய அணி தடுமாறிக் கொண்டுள்ளது.
  • நீண்ட நேரம் தாக்குபிடித்து நிதானமாக ஆடிய கோஹ்லி-ஜடேஜா ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். அவரது வேகத்தில் ஜடேஜா 10 ரன்களில் (34 பந்துகள், 2 பவுண்டரி) ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 30.5 ஓவர்களில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • விக்கெட் சரிவை தடுக்கும் முனைப்பில் கோஹ்லி மற்றும் ரஹானே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அணி 39 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது. கோஹ்லி 45 ரன்கள் (80 பந்துகள், 7 பவுண்டரி) ரஹானே 5 ரன்கள் (18 பந்துகள்) களத்தில் உள்ளனர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!