மார்ச் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – பிரதமர் அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பு:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் முதல் வகை கொரோனா தொற்றின் பாதிப்பு உலகம் முழுவதும் குறைய தொடங்கிய சமயத்தில் புதிதாக தகவமைத்து கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பரவ தொடங்கியது. இதன் பாதிப்பு கடந்த மாதம் முழுவதும் இங்கிலாந்தில் அதிகமாக இருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தான் பாதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது.
இளையோர் குத்துச்சண்டை போட்டி – 5 தங்க பதக்கம், 2வது இடத்தில் இந்தியா!!
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் 10,641 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இதுவரை 17.7 மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தொற்றினால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் 4 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதில், முக்கிய திட்டமாக பள்ளி கல்லூரிகள் திறப்பு பற்றி அறிவித்துள்ளார். அதன்படி, மார்ச் 8ம் தேதி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மேலும், அதிகபட்சமாக 2 பேர் ஒரு இடத்தில் கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26ம் தேதி முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்