IND vs ENG டெஸ்ட் போட்டி – சிராஜ் மீது பந்தை எறிந்து எல்லைமீறும் இங்கிலாந்து ரசிகர்கள்!
இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே நடைபெறும் வரும் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் ரசிகர்களின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். அதன் கீழ் நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற போட்டியில் கூட வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை வீசியதாக ரிஷப் பாண்ட் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அட்டூழியம்:
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டங்களில் முதல் போட்டி ட்ராவில் முடிந்தது. தொடர்ந்து 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) முதல் துவங்கியுள்ள 3 ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, ஆட்டத்தின் முடிவில் வெறும் 78 ரன்கள் பெற்றது.
தியேட்டரில் வெளியாக உள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம்? ரசிகர்கள் ஆர்வம்!
இதில் ரோஹித் சர்மா, ரஹானே இருவரும் 2 இலக்க ரன்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 26) மீண்டும் துவங்கியுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் எவ்வித விக்கெட்டுகளும் இழக்காமல் 120 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில் முதல் நாள் போட்டியின் போது மைதானத்தில் பீல்ட்டிங் செய்து வந்த இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை வீசியுள்ளார் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அவர் கூறுகையில், ‘போட்டி மைதானத்தில் சிராஜ் மீது ஒருவர் பந்தை வீசியதாக தெரிகிறது. இந்த தகவலை அறிந்ததும் கோலி வருத்தப்பட்டார். போட்டியில் பீல்ட்டிங் செய்யும் போது வீரர்களை என்னவேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால் பொருட்களை தூக்கி எறியாதீர்கள். இது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் இந்த சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கே.எல். ராகுல் மீது ரசிகர் ஒருவர் பாட்டில் மூடியை எறிந்திருந்தார். ஆனால் அந்த மூடியை திரும்ப அவரிடமே வீசும்படி விராட் கோலி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.