IND Vs ENG 2nd Test : இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய கோஹ்லி – மகிழ்ச்சியில் ஆரவாரம்!
இன்று நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 272 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்தின் இலக்கு:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. ஆட்டத்தின் 5 வது நாளான இன்று முதலில் இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இணைந்து ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார்கள்.இன்றைய போட்டியில் இருவரும் இணைந்து 77 ரன்கள் எடுத்தனர். முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸ்ல் இந்தியா 154 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடங்கினார்கள்.
ஆப்கானிஸ்தானில் தொடரும் பதற்றம் – 4 காரில் நிரப்பிய பணத்துடன் அதிபர் அஷ்ரப் கனி ஓட்டம்!
இவர்களின் கூட்டணியை முறியடிக்க இங்கிலாந்து கேப்டன் ரூட் மிகவும் ஆக்ரோஷமான முறையில் பந்துகளை வீசினார். தொடர்ந்து ஆட்டத்தில் இந்தியா 272 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில், இரண்டாவதாக காலம் இறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் க்கு பும்ரா வீசிய பந்தை இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி கேட்ச் பிடித்தார். இதனால் இங்கிலாந்து கேப்டன் அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.
TN Job “FB Group” Join Now
ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் கோஹ்லி மைதானத்தில் துள்ளி ஓடி ஆரவாரம் செய்தார். அணி மொத்தமும் இந்த விக்கெட்டை கொண்டாடியது. ரூட்டின் விக்கெட்டின் போது இங்கிலாந்து அணி 67 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த போட்டியில் எளிதாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எழுந்து உள்ளது.